Monday, November 13, 2017

தொடாமலேயே ஔிர்கிறேன்...!!!

கண்ணே,
கம்பியில்லா தொழில்நுட்பம்
கனவாகவே இருக்கிறது
பலருக்கு...!!!
ஆனால்  எனக்கோ
பழமையான ஒன்று
உன்னை கண்ட நாளிலிருந்து...!!!
பிறகென்னடி
என்னை தொடாமலேயே
ஔிர்கிறேன்
நீ
என்னை காணும் போதெல்லாம்...!!!

Monday, October 23, 2017

நகர்கிறதா??? நிற்கிறதா???

விரைவாய் நகர்கிறதோ
நாட்கள் என
விசித்திரத்தில் வியக்கின்றனர்
மக்கள்...!!!

எனக்கும் தான்
ஆச்சர்யம்
அப்படி விரைவாய்
செல்கிறதா நாட்கள் என..???

ஏனெனில்
கார்கால தூரலில்
கைகோர்த்த நொடிகளும்
ஒரு ஓர தோலினில்
தலைசாய்த்த நிமிடமும்
உரையாடி பகிர்ந்திட்ட
உன்னத நாட்களும்
இன்னும் நகராமல்
என்னுள்ளே
நின்று கொண்டிருப்பதால்...!!!

Monday, November 16, 2015

நீ இல்லா எதுவும்...!!!

உன் முகம் பார்க்கா
பொழுதுகள் எல்லாம்
விரைவாய் இருண்டு விடுகிறது
என்
மனதினை போலவே...!!!

உன் துணை இல்லா
பயணங்கள் எல்லாம்
நிறைவுராமல் நின்றே விடுகிறது
என்
ஆசைகளை போலவே...!!!

உன் ஒலி கேட்கா
நிமிடங்கள் எல்லாம்
காணாமலே போய் விடுகிறது
என்
கனவுகளை போலவே...!!!

'நீ' இல்லா எதுவும்
செயலற்றே முடிகிறது
என்னில்...!!!
'நாம்' ஒன்றிணைந்தால்
வென்றிடலாம் வாழ்வில்...!!!

Wednesday, October 21, 2015

லிட்டில் ஹார்ட்ஸ்...!!!!

சில இதயங்கள்
நொறுங்கும் போது
இனிக்கவும் செய்கிறது..!!!!
பிரிட்டானியா லிட்டில் ஹார்ட்ஸ்...!!!!

Monday, August 24, 2015

அவளில்லாமல்...!!!!

எழுத்துக்களின்றி
வார்த்தைகளும் வாக்கியங்களும்
எப்படி நிறைவுராதோ
அப்படித்தான்
என் வாழ்கையும்
அவளில்லாமல்...!!!! 

Monday, July 20, 2015

வந்தாயோ??? சென்றாயோ???

நிழல்களை நினைவினில்
விதைத்துவிட்டு
நிஜங்களை அறுவடை
கொண்டாயோ

கனவுகளை கடலளவு
கொடுத்துவிட்டு
கண்களை பறித்து
சென்றாயோ...???

மலர்களை மனதினில்
பூக்கவிட்டு
வசந்தத்தை திருடிப்
பிரிந்தாயோ

விழிகளில் அம்பினை
ஏவிவிட்டு
வலிகளை நெஞ்சினில்
தைத்தையோ...???

பார்வையில் ஏக்கங்கள்
புகுத்திவிட்டு
வார்த்தையில் வஞ்சகம்
விளைத்தையோ

என் உலகமாய்
என்னுளே வளர்ந்து விட்டு
உயிரினை பிரித்து மறைந்தாயோ
நடைபிணமாய் நடந்திட மொழிந்தாயோ..????

Wednesday, June 3, 2015

அணுகுண்டும், அழகு விழியும்..!!!!

அணுகுண்டும்
அவளின் அழகு விழியும்
ஒன்றுதான்...!!!!

விழுந்து ஆண்டுகள் ஆகியும்
என்னை
வதைத்து கொண்டே இருப்பதால்...!!!!

Tuesday, March 31, 2015

காலங்களாய்...!!!

நொடிகளாய் என்னுள்
நுழைந்து விட்டாய்
நிமிடமாய் உள்ளே
கலந்து விட்டாய்...!!!

மணிகளாய் அணுவில்
கரைந்து விட்டாய்
நாட்களாய் நினைவில்
நிறைந்து விட்டாய்...!!!

வாரமாய் உன்னை
ரசிக்க வைத்தாய்
மாதமாய் மனதை
பறக்க வைத்தாய்...!!!

வருடமாய் என்னை
வதைத்து விட்டாய்
யுகங்களாய் உயிரில்
உறைந்து விட்டாய்..!!!

Tuesday, March 3, 2015

தேடல்...!!!

இன்றுவரை
தேடிக் கொண்டு தான்
இருக்கிறேன்
உலக மொழிகளில்...

உன்
அழகினை வருணிக்கும்
அந்த வார்த்தையை...!!!

Wednesday, February 11, 2015

உனக்கா??? பூவிற்கா???

சகியே,
உன்னை காணும் போதெல்லாம்
குழப்பம் என்னுள்
குடியேறுகிறது...!!!

நீயே சொல்லடி
பூவுடன் கூடிய புகைப்படத்தில்
விளம்பரம்
உனக்கா??? பூவிற்கா???