Wednesday, October 31, 2012

உண்மையான பொய்...


அவள் 
மறுக்கிறாள்..
பிறர் அறியாமல் என்னை 
ரசித்ததை அவள் 
கண் கண்ணாடி சொல்லாது 
என்ற தைரியத்தில்...

அதுவல்லவா பாக்கியம்...


அடடா
அதுவல்லவா பாக்கியம்...
அவள் விரலுக்கும் 
அழகு இதழுக்கும் 
இடையில் அனுதினம் விளையாடி 
விமோச்சனம் பெரும் 
உணவுக் கரண்டியாய்
பிறந்திருந்தால்... 

Tuesday, October 30, 2012

காதோர ஒற்றை முடி...

நீ 
எத்தனை முறை ஒதுக்கினாலும் 
என் மனதினை போல் 
உன் அழகு முகத்தினை 
காண துள்ளி வருகிறது 
உன் காதோர ஒற்றை முடி...

Monday, October 29, 2012

எதிர்வினைகள்....

புறக்கணிக்கப் படுகிறது 
எனத் தெரிந்தும் 
அவள் பின்னால்
பயணிக்க முனைகிறது 
என் மனம்....
பதிலெதுவும் கிடைக்காது
எனப் புரிந்ததும் 
அவளுக்கு குறுந்தகவல் 
அனுப்புகிறது என் கரம்...
மறந்திட முடியாது 
என அறிந்தும் 
அவள் நினைவினை 
அழித்திட முயல்கிறது 
என் உள்ளம்...
என் சுரப்பிகளின் 
எதிர்வினைகளை 
நிறுத்தவும் முடியாமல் 
நகர்த்தவும் முடியாமல் 
திண்டாடுகிறது உள்ளம்...

Friday, October 26, 2012

என்று கிடைக்கும் விமோச்சனம்....!!!!

அவளை மறக்க எண்ணி 
நித்தம் நினைத்து 
கொள்கிறேன்....
கனவிலும் 
அவள் முகம் 
கருவிழிகளிலும் 
அவள் முகம்...
நின்றாலும் தொடுகிறது 
நடந்தாலும் தொடர்கிறது 
அவள் நினைவுகள் என் 
நிழல் போல....
எனக்கு 
மறக்கவும் மனமில்லை...
மணக்கவும் அவளில்லை...
என்று கிடைக்கும் விமோச்சனம்
என் கண்களின் கண்ணீருக்கும் 
கைகளின் தண்ணீருக்கும்....

Tuesday, October 16, 2012

உடைத்துவிடத்தோணுதே...

உடைத்துவிடத்தோணுதே...
என்னவளின் 
அலைபேசி எண்ணை
வாங்கிடும் நொடியில் 
சிணுங்கி 
சிக்கலை ஏற்படுத்திய 
எனது அலைபேசியை...

பரிசு...


காற்றோடு ஆடிடும் 
காதோர முடியினை 
நுனி விரலால் ஒதுக்கிடும் 
அழகிற்கே நான் கொடுப்பேன் 
அவள் காதோடு சிணுங்கிடும்
கண் கவரும் தோடு....

Monday, October 8, 2012

காத்துகொண்டிருகிறேன்...

காத்துகொண்டிருகிறேன்...
முடிவில்லா பயணத்தை 
என்னவள் விரல்பிடித்து 
வலி இல்லாமல் 
கடப்பதற்கு...

எதிர்பார்த்துகொண்டிருகிறேன்...
அளவில்லா தவிப்புகளை 
அவளுடன் பகிர்ந்திடும் 
குறைந்திடா நொடியிற்கு...

ஏங்கிகொண்டிருகிறேன்...
அழியாத நினைவுகளை 
என் நெஞ்சத்தில் 
செதுக்கிடும் என்னவளின் 
அன்பிற்கு...

உருகிகொண்டிருகிறேன்....
மேகத்தில் ஒளிந்திருக்கும் 
நிலவினை போல் 
என்னக்குள் மறைந்திருக்கும் 
அழகு முகத்தினை 
காண்பதற்கு....

ஆசைகொண்டிருகிறேன்....
எண்ணற்ற மாற்றங்களை 
என்னுள்  அளவற்ற அன்பினால் 
புகுத்திடும் என்னவளின் 
குணத்திற்கு....