Wednesday, December 17, 2014

இருளாக...!!!

அவள் முகம் பார்க்காத
நாட்களோ
அவளிடம் பேசாத
தினங்களோ
கருப்பு தினமென்றால்
இன்றுவரை என் நெஞ்சம்
இருளாகத்தான் உள்ளது...

என்னவளை
சந்தித்த நொடியிலிருந்து...!!!

Friday, November 28, 2014

இலக்கியங்கள்...!!!!

ஒரு சில எழுத்துக்கள்
ஓராயிரம் வார்த்தைகளின்
இலக்கணமென்றால்

என்னவள்  அழகிற்கு
சில லட்சக் கவிதைகளும்
இவ்வுலகின் இலக்கியமே...!!!

Monday, November 17, 2014

கடினமாகும் விடுமுறைகள்...!!!!!


விடுமுறை நாட்களும்
கடினமாகிறது
கண்ணே
உன் கண்களை காணாததால்...!!!!!

Tuesday, November 11, 2014

அதெப்படி முடியும்..???

சகியே,
நீ
சுலபமாக முடித்து விட்டாய்
உன்னை
நினைக்கவும் கூடாதென்று...!!!!

அதெப்படி முடியும்..???
உன்னை நினைப்பது
கண்கள் இமைப்பது போன்றதல்ல
என்
இதயம் துடிப்பதை போன்றது...!!!!

Tuesday, October 14, 2014

உன்னை தவிர...!!!

அன்பே,
எனக்கு உன்னை 
பிடிக்குமென்பது 
உலகறிந்த ஒன்று ...
ஆனால் 
உன்னை தவிர...!!!

Thursday, September 18, 2014

சிறந்த ஓவியம் உண்டோ???

பெண்ணே,
நீ கைப்பட மையிடும்
உன்
கண்களை விட

சிறந்த ஓவியம்
இப்பூவுலகில்
ஏதேனும் உண்டோ..???

Tuesday, September 9, 2014

குருடனாகின்றேன்...!!!

பெண்ணே,
உன் கண்களை
கண்டதும்
நான் குருடனாகின்றேன்...!!!

அதன் அழகினை
என் விழிகளில்
நிரைத்துக் கொண்டு..!!!

முயன்றிடாமலேயே....!!!

முடிந்துவிடும் என்றெண்ணி
முயன்றிடாமலேயே
இருந்து விடுகிறேன்
மனதில் கனவுகளுடன்...!!!!

ஒவ்வொரு முறையும்
நீ
எதிர்வரும் போழுது...!!!

Monday, May 12, 2014

பொய்யாகும் அறிவியல் விதிகள்...!!!


பெண்ணே,
அறிவியல் விதிகள்
அனைத்தும்
அறவே பொய்த்து
விடுகிறது உன்னால்...

யார் சொன்னது
ஈர்ப்பு விசை எப்பொருளையும்
புவி நோக்கி
இழுக்குமென்று..???

என் நெஞ்சம்
மிதக்கவல்லவா செய்கிறது
உன்
கயல் விழிகள்
ஈர்ப்பதனால்...!!!

 

Thursday, April 10, 2014

இது தான் காரணமோ..?

அவள்
சுவாச காற்று பட்டதால் என்னவோ
இளம்
பூக்களும் பூப்பெய்தி
தினம்
வாசம் வீசுகின்றன..?