நான்
கனவுக்குள் தொலைந்துவிட்டேன்...
ஆம்
உன்னுடன் பேச நினைக்கும்
தொலைபேசி உரையாடலை
மனதிற்குள் நித்தம்
பயிற்சி செய்துகொள்கிறேன்...
பருவ மழை சாரலில்
ஒரு கொடையுனுள்
இருவரும் நடந்திடும் தருணத்தை
நினைத்து ரசித்து
மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் ..
மழைத் தூரலில்
முழுதாய் நனைந்திடாமல்
நடுக்கத்துடன் அருந்திடும்
சாலையோர தேநீரை
உன் அருகில் அமர்ந்து
ருசித்து கொண்டிருக்கிறேன்...
விடைகொடுக்க மனமில்லாமல்
கைகளை கோர்த்து கொண்டும்
தோல் மீது சாய்ந்து கொண்டும்
பரிமாறும் காதல் வரிகளை
என் நெஞ்சில்
பதிய வைத்துகொண்டிருகிறேன்...
உன்
நினைவுகளோடு கனவில்
வாழ தொடங்கிவிட்டேன்...
உண்மையில் நீயோ கனவாய்...