Wednesday, May 22, 2013

ஒற்றை ரோஜா...

வரம் கிடைத்தும்
என்னவளின் 
அழகு முகத்திடம் 
தோற்று விடுகிறது...

அவள் 
கூந்தலில் ஆணவமாய் 
அமர்ந்திருக்கும் 
ஒற்றை ரோஜா...

Thursday, May 9, 2013

தடையாகும் நாணம்...

பெண்ணே
அருகில் இருந்தும்
அறிமுகத்திற்காக ஏங்குகிறேன்...

என்
நாணங்களை தவிர்த்து
உன்னிடம்
நயமுடன் உரையாடும்
நாளினை எண்ணி...

Thursday, May 2, 2013

விடியும் வரை...

எனை ஆளும் ஒருவனை
மனம் கவரும் மன்னனை
தினந்தோறும் எண்ணியே
தவித்திருந்த அந்நாளும்...

வரன் பார்க்கும் பொழுதுனில்
முகம் சிவக்கும் வேளையில்
ஓர விழி பார்வையில்
ரசித்திடும் இந்நாளும்...

உறவினர்கள் கூடியே
மகிழ்ச்சியுடன் பேசியே
உணர்வுகளை சேர்க்கையில்
நிச்சயங்கள் செய்கையில்

கை விரல்கள் ஆடிடும்
இரு இதழ்கள் பேசிடும்
விடியும் வரை...