Friday, December 21, 2012

தொலைந்துவிட்டேன் ..


நான் 
கனவுக்குள் தொலைந்துவிட்டேன்...
ஆம் 
உன்னுடன் பேச நினைக்கும் 
தொலைபேசி உரையாடலை 
மனதிற்குள் நித்தம் 
பயிற்சி செய்துகொள்கிறேன்...

பருவ மழை சாரலில் 
ஒரு கொடையுனுள் 
இருவரும் நடந்திடும் தருணத்தை 
நினைத்து ரசித்து 
மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் ..

மழைத் தூரலில் 
முழுதாய் நனைந்திடாமல் 
நடுக்கத்துடன் அருந்திடும் 
சாலையோர தேநீரை 
உன் அருகில் அமர்ந்து 
ருசித்து கொண்டிருக்கிறேன்...

விடைகொடுக்க மனமில்லாமல்
கைகளை கோர்த்து கொண்டும்
தோல் மீது சாய்ந்து கொண்டும்
பரிமாறும் காதல் வரிகளை 
என் நெஞ்சில் 
பதிய வைத்துகொண்டிருகிறேன்...

உன் 
நினைவுகளோடு கனவில் 
வாழ தொடங்கிவிட்டேன்...
உண்மையில் நீயோ கனவாய்...

Monday, December 10, 2012

சொல்லாமலே இருந்திருப்பேன் ...

முடியாது 
என்ற சொல்லுக்கு 
முப்பது வரி விளக்கமா?

தெரிந்திருந்தால் 
சொல்லாமலே இருந்திருப்பேன்
என் கனவுகளை ...
பாவம் 
விரல் நோக 
விடையனுப்பியிருக்க மாட்டாள் 
என்னவள்...

Monday, December 3, 2012

துடிக்கின்றேன்...

எத்தனை பெண்களை பார்த்திருந்தாலும் 
உன் 
கண்களை காணும் 
நொடியில் தான் 
என் இதயத்தின் இடப்பக்கம் 
கனமாகிறது...
இப்படிப்பட்ட  உணர்வு  
உனக்குள்ளும் இருக்குமோ 
என்னும் 
எண்ணமும் ஆசையும் 
என்னுள் எண்ணற்ற 
கனவுகளை ஏற்படுத்துகிறது ...
என் தவிப்புகளை புரிந்திருந்தும்
காதலிக்க 
நீயோ தயங்குகிறாய் 
நானோ  துடிக்கின்றேன்...