Welcome to Vijay's Blog
Monday, January 21, 2013
அன்பினால் தவிக்கும் அன்பு..!!!
பிறந்த நொடி முதல்
பிடித்ததையே செய்தவர்கள்
உன்
மனம் கவர்ந்தவனை
மறுத்தா விடுவார்கள்???
தவிர்க்கப்படுமென்ற
தய
க்
கத்தில் நீ
புரிந்திடாதது
என்
காதலை மட்டுமல்ல...
உன்
அன்பு தெய்வங்களின்
மனதையும் தான்...
Friday, January 18, 2013
தண்டனை...
அனுமதியின்றி நினைவில்
நுழைந்தவளுக்கு
ஆயுள் தண்டனை...
இதயத்தில்...
Thursday, January 17, 2013
தவித்திட நினைத்து...!!!
தவிர்த்திட நினைத்து
தோற்று விடுகிறேன்...
ஒவ்வொரு முறையும்
அவள்
அழகு விழிகளிடம்...
Friday, January 11, 2013
கனவாகும் காலச்சுவடுகள்....
இன்றெதுவும்
கனவாகி போகின்ற
காலம் தான்...
பள்ளி பேருந்தின்
ஜன்னல் ஓரத்தில்
தலை சாய்த்தபடி நான்
எண்ணிய மரங்கள் - இந்த
கலியுகத்தின் காசுகளாய்
உருமாறி வருவதும்....
கோடை வெயிலின்
கொடிய சூட்டினை
குதூகலமாய் தனித்த கேணிகள்
புவி வெப்பமாதலால்
கானல் நீராகுவதும்.....
மாதம் மும்மாரி
என்ற நிலை மாறி
ஆண்டில் ஒரு பருவமாவது
மழை காலம் என்பதும்
நாளைய சமுதாயத்தின்
கனவுகளே
....
Tuesday, January 8, 2013
வழிசொல்லடி...
தனிமை
என்னை வதைக்குதடி...
ஒவ்வொரு நொடியும்
உன்
நினைவுகளை விதைத்து
என்
இதயத்தை இறுகச் செய்கிறது...
முன்பு போல் இல்லை
என் உலகம்...
காண்பவைகள் எல்லாம்
உன்
அழகு முகமாவதும்
கேட்பவைகள் எல்லாம்
உன்
இனிய குரலாவதும்
வாடிக்கையாகி விட்டது...
உன்
நினைவுகளோடு நடக்கின்றேன்
என்னோடு இருப்பதாக உணர்கின்றேன்...
இந்த
வேதனை எதற்கு போதுமடி..
இதில்
மீண்டு இன்புற வழிசொல்லடி...
Thursday, January 3, 2013
வேண்டா விருப்பம்...
பிடித்திடும் என்பதால்
பிரிந்திட துணிகிறாய்...
உன்
தவிப்புகள் புரிந்ததால்
தனிமையில் துடிக்கிறேன்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)