Friday, January 11, 2013

கனவாகும் காலச்சுவடுகள்....

இன்றெதுவும் 
கனவாகி போகின்ற 
காலம் தான்...

பள்ளி பேருந்தின் 
ஜன்னல் ஓரத்தில் 
தலை சாய்த்தபடி நான் 
எண்ணிய மரங்கள் - இந்த 
கலியுகத்தின் காசுகளாய் 
உருமாறி வருவதும்....

கோடை வெயிலின்
கொடிய சூட்டினை 
குதூகலமாய் தனித்த கேணிகள் 
புவி வெப்பமாதலால் 
கானல் நீராகுவதும்.....

மாதம் மும்மாரி 
என்ற நிலை மாறி 
ஆண்டில் ஒரு பருவமாவது 
மழை காலம் என்பதும் 
நாளைய சமுதாயத்தின் 
கனவுகளே....

No comments:

Post a Comment