Tuesday, January 8, 2013

வழிசொல்லடி...


தனிமை 
என்னை வதைக்குதடி...

ஒவ்வொரு நொடியும் 
உன் 
நினைவுகளை விதைத்து 
என் 
இதயத்தை இறுகச் செய்கிறது...

முன்பு போல் இல்லை 
என் உலகம்...

காண்பவைகள் எல்லாம் 
உன் 
அழகு முகமாவதும் 
கேட்பவைகள் எல்லாம் 
உன் 
இனிய குரலாவதும் 
வாடிக்கையாகி விட்டது...

உன் 
நினைவுகளோடு நடக்கின்றேன் 
என்னோடு இருப்பதாக உணர்கின்றேன்...

இந்த 
வேதனை எதற்கு போதுமடி..
இதில் 
மீண்டு இன்புற வழிசொல்லடி...

2 comments: