Monday, February 18, 2013

சுகமாகும் சொகுசுந்து பயணம்...

நெடுதூர பயணமும்
நொடிப் பொழுதாய்
நகர்ந்திடும் அலுப்பில்லாமல்...

அணிந்திருக்கும் ஆடையை
காட்டி குதூகலம்
அடைவதும்...

ஓடிடும் மரங்களை
பார்த்து தலையாட்டி
ரசிப்பதும்...

சாலையோர பூக்களை
கேட்டு வேண்டுமென்று
அழுவதும்...

நிறைந்திருக்கும் தின்பண்டங்களை
சிதறடித்து தின்பதும்...

விளையாட்டு  களைப்பில்
ஆனந்தமாய் உறங்குவதுமாக
குட்டி தேவதைகளின்
குறும்பான செயல்களால்
சுகமாகும் சொகுசுந்து
பயணம்....

Tuesday, February 12, 2013

அலையாய்...

நீ 
சிறையிட்டு மறைத்திருக்கும் 
இதயத்தை 
நான் 
விடுவித்து மகிழ்விக்க 
விரும்புகிறேன்...

நீ 
மனமுவந்து வெளியேற 
மறுப்பதனால் 
கடல் அலையாய் கரைதொட்டு 
திரும்புகிறேன்....

Thursday, February 7, 2013

பொங்கலோ பொங்கல்...

வயல் வெளியிலே 
நெல்லை பார்க்கையுலே 
கண்ணு குளிருதையா...

ஒன்றா கூடிக்கொண்டு 
கதிர் அறுக்கையில் 
மனம் நிறையுதையா...

வேக வெச்சபின்னே 
உரல் குத்தையுலே 
அண்ணம் பிறக்குதையா...

எல்லா உயிர்களும் 
உண்டு மகிழ்கையில் 
திருப்தி கிடைக்குதையா...

ஜல்லிக்கட்டு காளை 
துள்ளி அடக்கையில் 
வீரம் பெருகுதையா...

கும்மி அடிச்சு 
பூ பறிக்கையில் 
ஆனந்தம் கூடுதையா...

காமதேனு தன்னை 
வேண்டி கும்பிடவே 
தொழில் வளருதையா...

பொங்கல் பொங்கும் வேளை 
குலவை சத்தம் 
நெகில வைக்குதையா...

இது 
இன்னல்கள் நீக்கிடும் 
இன்பங்கள் பெருக்கிடும் 
காணும் பொங்கலையா...
இனித்திடும் 
பொங்கலோ பொங்கலையா... 

Wednesday, February 6, 2013

இதமாகும் ஒலிக்கடிகை...

சுகமான உறக்கத்தை 
சத்தமிட்டு நொறுக்கிடும் 
கடிகார ஒலிகூட 
இனிமை தான்...

நள்ளிரவில் நண்பனுக்கு 
பிறந்தநாள் வாழ்த்துக்களை 
பகிர்ந்திடும் பொழுது...

Sunday, February 3, 2013

விரைந்தோடும் வார்த்தைகள்...

அன்னையின் அரவணைப்பில் 
வரமறுத்த எழுத்துக்கள் 
கவிதைகளாய் பாய்கிறதின்று...
அவளை கண்டவுடன்...