நினைவுகளை முழுமையாய்
நிறைவேற்றிடும் உலகம்
கவலைகளை கடுகளவும்
கொண்டிராத துருவம்...
இன்பமோ என்றென்றும்
இன்றியமையாத பருவம்
துன்பமோ தென்படாமல்
தொலைந்திட்ட உருவம்...
இனி
இனித்திடும் வெற்றிகள்
இமைகளை நிறைத்திடும்
வருத்திடும் தோல்விகள்
இல்லாமல் நகர்ந்திடும்...
இது
மானிடம் உணராத
உன்னத உறவு...
நாம்
தினந்தோறும் கண்டிடும்
மனம்கவரும் கனவு....