Monday, April 15, 2013

ஒரு பார்வை சிறு பார்வை...

பெண்ணே
உன்னை கடந்திடும் பொழுது
ஏவிடும் கள்ளப் பார்வையை
ஒருமுறை
என் எதிர்வரும் பொழுது
பொழிந்திட கூடாதா..?

முழு மதியால் ஒளிர்ந்திடும்
இரவினை போல்
என் மனதும்
முழுமையாய் நிறைந்திடுமே
உன் விழியால்...!

Monday, April 8, 2013

இருமடங்கு...

எந்நாளும் எனக்கு
பிடித்தவையே தந்துவிட்டு
மனம் கவர்ந்தவனை மட்டும்
மறுப்பது நியாயமா?

ஒருமுறை என்னவனிடம்
பேசிப் பாருங்கள்...
அவனை மட்டுமல்ல
அவனை காதலிப்பதற்கு
என்னையும் பிடிக்கும்
இருமடங்கு...

Wednesday, April 3, 2013

பூகம்பம்....

பெண்ணே
உன் முதல் பார்வையே
மனதை நொறுக்கி விட்டது..
பிறகெப்படி
பூகம்பம் வராமலிருக்கும்
ஒவ்வொரு நாளும்
நீ
தரை பார்த்து
நடக்கும் போது...