Thursday, January 29, 2015

சுதந்திரமாய்..!!!!




நீ
சுதந்திரமாய் முறிந்து
விட்டாய்
வடுக்களை என்னிடம்
கொடுத்துவிட்டு...!!!!

இனி
பறந்திடும் வழிகளில்
துணை யாரு??
உன்
இடத்தினை நிரப்பிடும்
இணை ஏது???

நீ
கிளைவிட்டு பிரிந்ததும்
காற்றோடு மிதக்கின்றாய்
நீ என்னைவிட்டு
போனதும் நெடும்
மரமாக வளர்கின்றேன்..!!!

சில
பிரிவுதான் வளர்ச்சியென
காலமும் உணர்த்துதே
அதை
ஏற்காத வாழ்க்கையும்
வலிகளுடன் ஓடுதே...!!!