என் மனதோடு
மையம் கொண்டு
உயிரோடு ஒன்றாகும்
உறவினை...
என் மனதில்
மறைந்திருக்கும் எண்ணற்ற
கவிதைகளை மனம்விட்டு
ரசித்திடும் மொழியினை...
என் உறக்கத்தில்
நித்தம் கற்பனையாகவே
காட்சியளித்திடும் என்
கனவு தேவதையை...
என் சுவாசமாய்
என் உயிராய்
என் உறவாய் கலந்திட
எனக்காகவே
பிறந்திருக்கும் என்னவளை....