Thursday, September 27, 2012

தேடிக்கொண்டிருக்கிறேன்...


தேடிக்கொண்டிருக்கிறேன்...
என் மனதோடு 
மையம் கொண்டு 
உயிரோடு ஒன்றாகும்
உறவினை...
என் மனதில் 
மறைந்திருக்கும் எண்ணற்ற 
கவிதைகளை மனம்விட்டு 
ரசித்திடும் மொழியினை...
என் உறக்கத்தில் 
நித்தம் கற்பனையாகவே 
காட்சியளித்திடும் என் 
கனவு தேவதையை...
என் சுவாசமாய்
என் உயிராய்
என் உறவாய் கலந்திட 
எனக்காகவே 
பிறந்திருக்கும் என்னவளை....

என் இதய துடிப்பு...


உயிர் காற்றை சுவாசித்து 
மனித இனம் வாழுதடி...
உன் நினைவை சேகரித்தே 
என் இதயம் துடிக்குதடி...

Wednesday, September 26, 2012

சிட்டாய்...


சிறகடிக்கும் சிட்டாய் 
என் சிந்தையில் 
நுழைந்த உன்னை 
பிரித்தெடுக்க மனமில்லாமல் 
அலைகிறேன் பித்தாக...
உன் நினைவால் என்றும் 
முத்தாக...

Monday, September 24, 2012

குறுந்தகவல்...


என்னவள் செல்லமாக 
கோபம் கொண்டால்...
அவளனுப்பிய 
குறுந்தகவலை சேகரிக்கவில்லை என்று..
நான் புன்னகைத்தேன்...
அவள் கனவிலும் 
நினைத்திருக்க மாட்டாள்
அவை அனைத்தும் என் 
நெஞ்சில் செதுக்கபட்டு விட்டன என்று...

நட்சத்திரங்கள்....


அவள் பார்த்த பின்பு 
பூத்த மலர்கள் இன்னும் 
பிரகாசித்து கொண்டிருகின்றன...
வானில் நட்சத்திரங்களாக....

என்னவள் !!!!!!

சூரியனும் சுருங்கி விடும் 
அவள் அழகில்...
குயிலின் ஓசை  குலைந்துவிடும் 
அவள் மொழியில்...
தண்ணீரால் மலரவில்லை பூக்கள் 
என்னவளின் புன்னகையால்...
கருமேகம் கரைந்து போகும் 
அவள் அழுகையில்...
வசந்தகாலம் வந்து போகும்  
அவள் சிரிக்கையில்...
காற்று மட்டுமா அலைகிறது 
அவள் இதயத்தை தேடி,
என் காதலும் தான்.....

Friday, September 14, 2012

என் சுவாசங்கள்..

என் வெள்ளை உள்ளத்தில்
நான் விரும்பிய வண்ணங்களை
தெளிப்பதும்....

என் நினைவுகளில்
பயணிக்கும் போது எனது
புகைப்படங்களை அலங்கரிப்பதும்...

நான் துவண்ட போதெல்லாம்
துணையாய் துயரம்
துடைப்பதும்...

என் துன்ப நொடிகளையும்
இன்ப வருடங்களாக்கும்

நண்பர்கள்
சொந்தம் மட்டுமல்ல...
எனது சுவாசமும் தான்...

உணரமுடியவில்லை...

என்னால் எழுதமுடியவில்லை...
என் எண்ணங்களை
ஒருங்கிணைத்து ஒரு வரி
கவிதை...!!!
அது போல்
இன்று வரை
உணரமுடியவில்லை - என்னவளை
நினைக்கும் நொடியில்
தோன்றிடும் ஆயிரம் கவிதைகளின்
காரணத்தை....

Monday, September 3, 2012

ரசிக்கிறேனடி...

அன்பே,
இறைவன் உன்னை படைத்திருந்தால் 
நான் ரசித்திருக்கவும் மாட்டேன்....
அவன் 
உன்னை வடித்தல்லவா இருக்கிறான் 
நான் காதலிப்பதற்கு....
எப்படி 
என்னால் முடியும் 
கண்  இருந்தும் குருடனாக
நடிப்பதற்கு....

காதலின் வேதம்

நீரின்றி அமையாது உலகு....
இது வள்ளுவனின் வாக்கு அன்று...!!!!!
அதுபோல்,
நீயின்றி நிறைவுறாது என் கனவு...
இது இக்காதலனின் வேதம் இன்று...