Thursday, March 21, 2013

ஏக்கம்...

ஒவ்வொரு நாளும்
என் இன்ப துன்பங்களை
பகிர்ந்திடும் இனிய நண்பனாக
இருக்க ஏக்கம் கொள்கிறேன் ...

ஆனால்
வழங்க இயலாத
வரத்தினை கேட்பது போல்
தந்தையாகவே அறிமுகபடுத்துகிறான்
இறைவன்
ஒவ்வொரு முறையும்...

Tuesday, March 19, 2013

ஒற்றையாக...

நடந்திடும்
வழிகள் அனைத்திலும்
இருவரின் கால் தடங்கள்...

ரசித்திடும்
இடங்களை நிறைத்திடும்
இருவரின் இனிய உறுவங்கள்...

இமைத்திடும்
விழிகள் முழுதிலும்
என்னவளின் அழகு முகங்கள்...

துடித்திடும்
இதயத்தை இறுக்கிடும்
சுகமான காதல் நினைவுகள்...

உண்மையில் மனமோ
நெடுந்தூரம் நீண்டிடும்
ஒற்றையடி பாதையில்
ஒற்றையாக கனவுகளுடன்...

Sunday, March 10, 2013

எப்போ புள்ள...

உன்ன
புரிஞ்சிட முடியல..
முழுசா
பிரிஞ்சிட மனமில்ல...

நா
பகிர்ந்திட தவிக்கிற...
நீ
தெரிந்தேதா ஒதுக்குற...

சிறு
காரணமு தெரியல...
பல
குழப்பங்கள் உள்ளத்தில...

உன்ன
நினைச்சாலே நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பறக்குதுள்ள...

நீ
பார்க்கும்போது தேகத்தில்ல
மின்சாரம் பாயுதுள்ள...

நீ
பேசும்போது காதினிலே
தேவதைகள் பாடுதுல்ல...

உன்
ஒத்த வார்த்த போதும்புள்ள
நித்தமும்
வசந்தம் வாழ்க்கையுல..

நீ
முடிவெடுக்க தயங்கயுல
உள்ளம்
வலியால வாடுதுல...

Monday, March 4, 2013

ஒருமுறையேனும்...

ஸகியே   ஒருமுறையேனும்
என் காதலை 
உன் மனதினில் 
உணர்ந்து பார்...

காதல் மலராதென 
மரத்திருக்கும் உன் மனதிலும் 
தீராத வசந்தங்களை தூவிடும் 
அற்புதங்களில் நெகிழ்ந்திடுவாய்...