Sunday, December 15, 2013

காலம் கடந்த பின்னும்...

காலம் காலம் கடந்த பின்னும்
கண்கள் உன்னை தேடடுதே...

உன்
அழகு விழிகாண உள்ளம்
நித்தம் ஏங்குதே...

கடிகாரம் உரைக்கிறது
நீ
வந்து போன சுவடுகள்...

என்
பிஞ்சு மனம் வலிக்கிறது
உன்
அன்பு மனம் காணாமல்...

காலம் தவற விட்டதால்
என்னை நானே வெறுக்கிறேன்...

உன்னை
காணாத நாளினை
நினைவிலிருந்து அழிக்கிறேன்...