Thursday, May 2, 2013

விடியும் வரை...

எனை ஆளும் ஒருவனை
மனம் கவரும் மன்னனை
தினந்தோறும் எண்ணியே
தவித்திருந்த அந்நாளும்...

வரன் பார்க்கும் பொழுதுனில்
முகம் சிவக்கும் வேளையில்
ஓர விழி பார்வையில்
ரசித்திடும் இந்நாளும்...

உறவினர்கள் கூடியே
மகிழ்ச்சியுடன் பேசியே
உணர்வுகளை சேர்க்கையில்
நிச்சயங்கள் செய்கையில்

கை விரல்கள் ஆடிடும்
இரு இதழ்கள் பேசிடும்
விடியும் வரை...

1 comment: