Tuesday, March 31, 2015

காலங்களாய்...!!!

நொடிகளாய் என்னுள்
நுழைந்து விட்டாய்
நிமிடமாய் உள்ளே
கலந்து விட்டாய்...!!!

மணிகளாய் அணுவில்
கரைந்து விட்டாய்
நாட்களாய் நினைவில்
நிறைந்து விட்டாய்...!!!

வாரமாய் உன்னை
ரசிக்க வைத்தாய்
மாதமாய் மனதை
பறக்க வைத்தாய்...!!!

வருடமாய் என்னை
வதைத்து விட்டாய்
யுகங்களாய் உயிரில்
உறைந்து விட்டாய்..!!!

No comments:

Post a Comment