Monday, July 20, 2015

வந்தாயோ??? சென்றாயோ???

நிழல்களை நினைவினில்
விதைத்துவிட்டு
நிஜங்களை அறுவடை
கொண்டாயோ

கனவுகளை கடலளவு
கொடுத்துவிட்டு
கண்களை பறித்து
சென்றாயோ...???

மலர்களை மனதினில்
பூக்கவிட்டு
வசந்தத்தை திருடிப்
பிரிந்தாயோ

விழிகளில் அம்பினை
ஏவிவிட்டு
வலிகளை நெஞ்சினில்
தைத்தையோ...???

பார்வையில் ஏக்கங்கள்
புகுத்திவிட்டு
வார்த்தையில் வஞ்சகம்
விளைத்தையோ

என் உலகமாய்
என்னுளே வளர்ந்து விட்டு
உயிரினை பிரித்து மறைந்தாயோ
நடைபிணமாய் நடந்திட மொழிந்தாயோ..????

No comments:

Post a Comment